| மணலாறில் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 2 உடலங்கள் உட்பட ஆயுதங்கள் மீட்பு |
|
|
| வா.கி.குமார் | |
| 11. October 2008 19:41 | |
|
தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6:00 மணிக்கு படையினர் பாரிய எடுப்பில் செறிவான எறிகணைச்சூட்டாதரவுடன் முன்நகர்வுத்தாக்குதலை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நேற்று பிற்பகல் 6:00 மணிவரை தாக்குதல் நடத்தி படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர். இதில் படையினர் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட படையினரின் இரு உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட்டுள்ளன.
ரி-56 ரக துப்பாக்கி - 01, ரி-56-2 ரக துப்பாக்கி - 01, ஆர்பிஜி செலுத்தி - 01, தலைக்கவசங்கள் - 04, ரவைத்தடுப்பு அணிகள் - 04, ரவைத்தாங்கி அணிகள் - 02, பை - 01 உள்ளிட்ட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. |
| < முந்தைய | அடுத்த > |
|---|





மணலாறில் உள்ள தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் படையினரின் இரு உடலங்கள் உட்பட ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
