|
ஜெனிவாவிற்கான விமானசேவையை குறைத்தது லிபியா |
|
|
|
ரி.என்.ஜே
|
|
11. October 2008 22:27 |
லிபிய அதிபர் கேர்ணல் கடாபியின் மகன் ஜெனிவா நகரில் கைது செய்யபட்டு வழக்கு தாக்கல் செய்யபட்டதன் விளைவாக லிபியாவிற்கும் சுவிற்சர்லாந்திற்கும் இடையில் ஏற்பட்ட ராஜதந்திர முறுகல் நிலை தொடர்கிறது. லிபிய தலைநகர் திரிபோலியில் இருந்து ஜெனிவாவிற்கு நடைபெற்று வந்த வாரத்திற்கு மூன்று தடவையான விமானப்போக்குவரத்தில் இரண்டை லிபியா ரத்து செய்துள்ளது.
இதன்படி திரிபோலியில் இருந்து ஜெனிவாவிற்கு வாரத்திற்கு ஒரு முறைமட்டுமே விமானப்போக்குவரத்து மட்டுமே நடைபெறும் என்று ஜெனிவா விமானநிலையப் பேச்சாளர் பிலிப் றோய் தெரிவித்தார்.
இதற்கு முன் கடந்த புதன்கிழமை சுவிற்சர்லாந்திற்கான மசகு எண்ணெய் விநியோகத்தை லிபியா நிறுத்துவதாக அறிவித்திருந்தது. அத்துடன் சுவிஸ் வங்கிகளில் வைப்பிலிருந்த நிதியையும் திரும்ப் பெற்றுள்ளது.
ஜெனிவாவில் லிபிய அதிபர் கடாபியின் மகன் ஹனிபால் கடாபி்க்கும் அவரது மனைவியும் ஹொட்டல் ஊழியரான பெண் ஒருவரை துன்புறுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து கைது செய்யபட்டு அவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.
|